Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி செங்குளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா

0

 

காமராஜரின் 121 வது பிறந்தநாள்: திருச்சியில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நாடார் சங்கத்தினர் பரிசுகள் வழங்கினர்.

திருச்சி பாலக்கரை நாடார் சமூக இளைஞர் சங்கத்தில் சார்பில் கல்விக்கடவுள் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா தலைவர் அய்யனார் நாடார் தலைமையில் செங்குளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகள் காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்தும், அவரது அரசியல் வாழ்க்கை, கவிதை வாழ்த்துதல், பாட்டு போட்டிகள், நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

  1. இந்நிகழ்வில்
    சங்கச் செயலாளர் பால்ராஜ் நாடார், பன்னீர்செல்வம்நாடார் மற்றும் நிர்வாகிகள் பள்ளி தலைமை பொறுப்பாசிரியர் எமிமால்ராணி, ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Leave A Reply

Your email address will not be published.