Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அதிமுக மாநகர ஆலோசனை கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல் சிறப்புரை

0

 

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான டி ரத்தினவேல் சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் அவர் பேசியபோது:-

ஆகஸ்ட் 20-ந் தேதி நடைபெறும் வீரவரலாறு பொன் விழா எழுச்சி மாநாட்டில் திருச்சி மாநகர் மாவட்டத்தில் இருந்து கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், கழகத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் திரளாக கலந்து கொள்ளவேண்டும்,
கழகத்தில் புதிய உறுப்பினரை சேர்க்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும்,

வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை விரைவாக தொடங்கி திருச்சி மாநகரில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் பூத் கமிட்டி மகளிர் குழு பாசறை குழு அமைக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள் வேண்டும், மீண்டும் எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆகியோரின் பொற்கால ஆட்சியை எடப்பாடி யார் தலைமையில் அமைத்திட அனைவரும் பாடுபடுவோம்
என பேசினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி.பரமசிவம், மாவட்ட துணை செயலாளர் பத்மநாதன், பொதுக்குழு உறுப்பினர் பெருமாள், மாவட்ட அண்ணா தொழில் சங்க செயலாளர் ராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் எம். ஆர்.ஆர்.முஸ்தபா, அன்பழகன், ஏர்போர்ட் விஜி, சுரேஷ் குப்தா, கலைவாணன்,நாகநாதர் பாண்டி, கவுன்சிலர் அம்பிகாபதி, ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம்,ரோஜர், உடையான்பட்டி செல்வம், தலைமை கழக பேச்சாளர் ராமசந்திரன், ஆமூர் சுரேஷ்ராஜா, தில்லை விஷ்வா உள்ளிட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.