சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பிரைனோ பிரைன் அபாகஸ் கல்வி நிறுவனத்தின் திருச்சி கிளை கண்டோன்மெண்ட் வில்லியம்ஸ் சாலையில் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் சார்பில் திருச்சி மண்டல அளவிலான 14 ஆம் ஆண்டு அபாகஸ் போட்டி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
பிரைனோ பிரைன் நிறுவன நிர்வாக இயக்குனர் ஆனந்த் சுப்பிரமணியன், திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவலிங்கம் ஆகியோர் போட்டிகளை நடத்தினர்.
பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது இரு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானோர கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். இதைத்தொடர்ந்து தேசிய அளவிலான மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.