Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளும் எம்ஜிஆர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி பணிகளை மாவட்ட செயலாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் ஆய்வு.

0

 

திருச்சி புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார் ஏற்பாட்டில்
பி ஹெச் இ எல் வளாகத்தில் பெல் நிர்வாக அனுமதியுடன் நான்காயிரம் சதுர அடியில் அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆரின் 12 அடி உயர திருவுருவ சிலையினை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் ஆறாம் தேதி மாலை 5 மணி அளவில் திறந்து வைத்து நடைபெறும் பொதுக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்ற உள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்காக பிரம்மாண்ட விழா மேடை அமைக்கப்பட்டு வருகிறது.மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அமர்வதற்கான மைதானம் செப்பனிடம் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த ஆய்வுப்பணிகளை இன்று அதிமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளருமான ப.குமார் எம் பி தலைமையில் முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட செயலாளருமான பரஞ்ஜோதி,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,
கழக அமைப்பு செயலாளருமான ரத்தினவேல்,மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளரும் முன்னாள் துணை மேருமான ஜே. சீனிவாசன்,
மாவட்ட இணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன்,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சிந்தை முத்துக்குமார்,தொழிலதிபர் இப்ராஹீம்சா ,  பேராசிரியர் பாபு, எம்.கே.குமார்,
மாமன்ற உறுப்பினர் அம்பிகாபதி,
பகுதி செயலாளர்
எம் ஆர் ஆர் முஸ்தபா உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.