ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி சக்தியின் புதிய தலைவர் பிரியா வனராஜ் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு.
ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி சக்தியின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருச்சியில் நடைபெற்றது.
ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தலைவராக பிரியா வனராஜ், செயலாளராக ஷோசன் செரியன், பொருளாளராக வனஜா ,மற்றும் நிர்வாக குழுவினர்கள் பதவி பிரமாணம் செய்தனர்.
அவர்களுக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டு உரையாற்றினார் .
பதவி ஏற்பு விழாவையொட்டி தையல் இயந்திரம், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் உதவி ஆளுநர் வளர்மதி குமரேசன், வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜானகி ராஜசேகர் உட்பட முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.