Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அரியமங்கலத்தில் உதவி ஆய்வாளர்களை தாக்கிய 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல்.

0

 

அரியமங்கலத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்களை இரண்டு ரவுடிகள் கைது.

திருச்சி அரியமங்கலம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சந்திரமோகன். இவர் ரோந்து வாகனத்தில் அரியமங்கலம் ஸ்டாலின் நகர் டாஸ்மாக் மதுபான கடை அருகாமையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது பொலிரோ பிக் அப் வாகனத்தில் இரண்டு ரவுடிகள் வந்தனர்.
அப்போது சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் சந்திரமோகன் மற்றும் வெற்றிமணி ஆகியோர் அந்த வாகனத்தை வழிமறித்து நிறுத்தினார்.பின்னர் வாகனத்தில் சோதனை இட்டபோது ரெண்டு அரிவாள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த நபர்களை பிடிக்க முயன்றனர்.

அப்போது ரவுடிகளுக்கு ஆதரவாக மேலும் பெண்கள் உள்பட 3 பேர் அங்கு வந்தனர். பின்னர் 5 பேர் கும்பலும் சேர்ந்து சந்திரமோகன் மற்றும் வெற்றிமணியை கையால் தாக்கி விட்டு பெட்ரோல் வாகனத்தை சேதப்படுத்தினர். மேலும் பேட்ரோல் வாகனத்தை சேதப்படுத்தி அறிவாளை காட்டி மிரட்டி விட்டு தப்பிச் சென்றனர் இதுகுறித்து சந்திரமோகன் அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் தப்பி ஓடிய பிரபல ரவுடிகள் அரியமங்கலம் அண்ணா நகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்த முத்துக்குமார்
(வயது 29) அரியமங்கலம் காவேரி நகர் திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (23) ஆகிய இருவரை கைது செய்தனர்.

மேலும் தப்பி ஓடிய இளவரசன் மற்றும் ரேணுகாதேவி கிருஷ்ணவேணி ஆகிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.