திருச்சி:
பூ வியாபாரியின் செல்போனை பறித்த வாலிபர் கைது.
பெங்களூர் சேஷாத்திரிபுரம் மூன்றாவது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 34 ).இவர் திருச்சி சத்திரம் அண்ணா சிலை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த விலை உயர்ந்த செல்போனை 3 பேர் பறித்து விட்டு தப்பி சென்றனர் .
இது குறித்து முத்துக்குமார் கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சி காட்டூர் கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 36) என்பவரை கைது செய்தார் .மேலும் தப்பி ஓடிய கார்த்தி, மணி ஆகியோரை தேடி வருகின்றனர்.