Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வெடிகுண்டு தடுப்பு பிரிவுக்கு நவீன ஸ்கேனர் கருவியை திருச்சி போலீஸ் கமிஷனர் வழங்கினார்.

0

 

திருச்சி மாநகர வெடிகுண்டு தடுப்பு
பிரிவுக்கு நவீன ஸ்கேனர் கருவியை
காவல் ஆணையர் வழங்கினார்.

திருச்சி மாநகர காவல்துறை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் செயலிழப்பு பிரிவுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான புதிய நவீன ஸ்கேனர் சாதனத்தை மாநகர காவல் ஆணையர் எம். சத்தியபிரியா வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில், காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், திருச்சி மாநகர வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவுக்கு புதிதாக ரூ.12 லட்சம் மதிப்பிலான நவீன ஸ்கேனர் சாதனம் வழங்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் வருகைதரும் நேரங்களில், அல்லது முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் இடங்களுக்கு இந்த சாதனத்தை எளிதில் எடுத்துச் செல்ல முடியும்.
திருச்சி காவல் ஆணையரகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருச்சி மாநகர வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயல் இழப்புப் பிரிவுக்கு, மாநகர காவல் ஆணையர் எம். சத்தியபிரியா வழங்கினார்.

இவற்றின் மூலம் வெடிகுண்டுகள் மட்டுமின்றி அரசால் தடைசெய்யப்பட்ட மற்றும் அனுமதியற்ற பொருட்களையும் கண்டறியும் வகையில் உள்ளது. ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும் இவற்றைக் கொண்டு பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ள முடியும்.

Leave A Reply

Your email address will not be published.