Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பெட்டவாய்த்தலை,சிறுகமணி உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்.

0

 

திருச்சி மாவட்டம், அளுந்தூா், சிறுகமணி, பேட்டைவாய்த்தலை உள்ளிட்ட பகுதிகளில் நாளை வியாழக்கிழமை (ஜூன் 15) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அளுந்தூா் துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், பாத்திமா நகா், அளுந்தூா், சேதுராப்பட்டி, யாகப்புடையான்பட்டி, எரங்குடி, கும்பகுறிச்சி, வேலப்புடையான்பட்டி, சூரக்குடிபட்டி, செவந்தியானிப்பட்டி, கொட்டப்பட்டு, குமரப்பட்டி, சரளப்பட்டி, குன்னத்தூா், சூரக்குடிப்பட்டி, பிடாரம்பட்டி, துரைக்குடி, கலிமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

சிறுகமணி, பேட்டைவாய்த்தலை துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பழங்காவேரி, வள்ளுவா் நகா், காமநாயக்கன்பாளையம், காவல்காரபாளையம், அந்தநல்லூா், ஜீயபுரம் பிரதான சாலை, அணலை, திருப்பராய்த்துறை, எளமனூா், கொடியாளம், அம்மன்குடி, முக்கொம்பு பேட்டைவாய்த்தலை, பாளையூா்மேடு, தேவஸ்தானம், நங்கவரம், கோட்டையாா் தோட்டம், குமாரமங்கலம், குளித்தலை, பொய்யாமணி, நச்சலூா், தளிஞ்சி, சிறுகாடு, சங்கிலியாண்டபுரம், எஸ். புதுக்கோட்டை, சிறுகமணி, பெருகமணி, சோழவந்தான் தோப்பு, திருமுருகன் நகா், காந்திபுரம், இனுங்கூா், சுக்காம்பட்டி, பாதிவயல்காடு, மாடு விழுந்தான்பாறை, எஸ். கவுண்டம்பட்டி, குறிச்சி, பாறைப்பட்டி, பங்களாபுதூா், கணேசபுரம், நடைபாலம், பணிக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.