திருச்சி:
மரத்தில் தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை.
திருச்சி இனாம்குளத்தூர் பெரியாளம்பட்டி நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பச்சமுத்து
(வயது 47). தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது.
இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு அவரது மனைவி வசந்தா தனது பெற்றோரின் ஊரான அரியலூரில் நடைபெறும் கோவில் திருவிழாவுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது கணவரையும் அழைத்தார். ஆனால் குடிபோதையில் இருந்த அவர் மனைவியுடன் செல்ல மறுத்தார்.
இந்த நிலையில் இரு தினங்கள் கழித்து இனாம்குளத்தூர் ஆலம்பட்டி புதூர் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் பச்சமுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்ததாக தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தா உடனடியாக வீடு திரும்பினார். பின்னர் இது குறித்து இனாம்குளத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.