திருச்சியில்
மத்திய பஸ் நிலையம் அருகே பிணமாக கிடந்த பெண்
அரசு மருத்துவமனையிலும் கிடந்த பிணம் குறித்து போலீசார் விசாரணை.
திருச்சி மத்திய பஸ் நிலைய அருகே ஒரு ஹோட்டல் பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கிடப்பதாக கோ-அபிஷேகபுரம் கிராம நிர்வாக அதிகாரி ஸ்டீபன் தன்ராஜ் கண்டோன்மென்ட் போலீசுக்கு புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனை பிரேத கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் திருச்சி அரசு மருத்துவமனை கேண்டீன் அருகில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது இதுகுறித்து ஆர்.எம்.ஓ. கணேசன் அரசு மருத்துவமனை போலீசுக்கு தகவல் கொடுத்தார் தகவலின் பெயரில் இன்ஸ்பெக்டர் அருள் ஜோதி பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார் தொடர்ந்து அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.