சோமரசம்பேட்டையில் இளம் பெண் தற்கொலை.காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் பரிதாபம்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கீழ பஞ்சப்பட்டி வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் சித்ரா (வயது 23).இவர் சோமரசம்பேட்டை மாரியம்மன் கோவில் தோப்பு பகுதியில் வசிக்கும் முருகானந்தம் என்கிற ஆனந்த் என்பவரை கடந்த 2022 நவம்பர் மாதத்தில் காதலித்து திருமணம் செய்தார்.
இதற்கு அந்த இளம் பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் திருமணத்துக்கு
பின் மகளுடன் பேசுவதை நிறுத்திவிட்டனர்.
இதற்கிடையே முருகானந்தம் மது அருந்திக்கொண்டு வீட்டுக்கு செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளார்.
இதனால் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளான சித்ரா தற்கொலை செய்வது என முடிவு செய்தார். பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.
இதுகுறித்து அவரது தாயார் மகாலட்சுமி சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சித்ராவுக்கு வரதட்சனை கொடுமை ஏதும் நடந்துள்ளதா? என்ற கோணத்தில் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.