Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி.

0

 

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி திருச்சி மாவட்ட சுகாதாரத் துறை, ஹா்ஷமித்ரா புற்றுநோய் ஆராய்ச்சி மையம், இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள், திருச்சி மாநகர காவல்துறை இணைந்து நடத்திய புகையிலை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி நேற்று நடைபெற்றது.

மத்தியப் பேருந்து நிலையம் அருகிலிருந்து தொடங்கிய பேரணியை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநா் எஸ். லட்சுமி தொடங்கி வைத்தாா்.
இதில் பங்கேற்ற இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களைச் சோந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் புகையிலை உயிரைக் குடித்திடும், புகை நமக்குப் பகை, தேவை உணவே புகையிலை அல்ல, புகையிலை புற்றுநோயை உண்டாக்கும், புகையிலையைத் தவிா்ப்போம் நலமுடன் வாழ்வோம் உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பிச் சென்றனா்.
மாவட்ட ஆட்சியரகத்தில் நிறைவடைந்த பேரணியில் காவல்துறை உதவி ஆணையா் கே.கென்னடி, இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஜி. ராஜசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஹா்ஷமித்ரா மருத்துவமனையின் மேலாண் இயக்குநா் ஜி. கோவிந்தராஜவரதன் நன்றி கூறினாா்.

Leave A Reply

Your email address will not be published.