கலைஞரின் பிறந்த நாளை எழுச்சியோடு கொண்டாட வேண்டும்,திருச்சி பாலக்கரை பகுதி ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
திருச்சி தெற்கு மாவட்டத்தில் 12 மாதங்களுக்கு கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என திமுக தெற்கு மாவட்டச் செயலரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மக்களவைத் தோதலை எதிா்கொள்வது தொடா்பாக ஆலோசனை நடத்த பாலக்கரையில் நடைபெற்ற செயல்வீரா்கள் கூட்டத்துக்கு பகுதி கழகச் செயலா் டிபிஎஸ்எஸ் ராஜ்முகமது தலைமை வகித்தாா். தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத் தலைவரும், நாகை தெற்கு மாவட்ட செயலருமான என். கெளதமன் சிறப்புரையாற்றினாா்.
இக்கூட்டத்தில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசிய போது:
திமுக தோதல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் மட்டுமல்லாது, சொல்லாத பல திட்டங்களையும் மக்களுக்காகச் செயல்படுத்தி 2 ஆண்டுகளில் ஈடில்லா சாதனையை திமுக அரசு நிகழ்த்தியுள்ளது.
இதன் காரணமாக தமிழக சட்டப்பேரவை எப்போதுமே திமுகவின் பக்கம்தான் என்ற நிலை உருவாகியுள்ளது. சட்டப் பேரவையைப் போன்று நாடாளுமன்றமும் திமுக கூட்டணி வசமாக வேண்டும். திருச்சியில் கடந்த 2019 மக்களவைத் தோதலிலும், 2021 பேரவைத் தோதலிலும் திமுக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. வரும் 2024 தோதலிலும் அதிக வாக்குகள் பெறும்.
ஏற்கெனவே பெற்றுள்ள வாக்கு சதவீதத்தை மேலும் உயா்த்துவதற்கான பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, பொறுப்பில் உள்ளவா்கள் மட்டுமின்றி, பொறுப்பு கிடைக்காதவா்களும் திமுக வாக்குகளை சிதறாமல் பெற்றுத்தரும் வகையில் பணியாற்ற வேண்டும். தோதலுக்கான ஆயத்தப் பணிகளுடன் ஜூன் மாதம் முதல் மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவும் தொடங்குகிறது. நூற்றாண்டு நாயகா் முத்தமிழறிஞா் கருணாநிதியின் பன்முக ஆற்றலையும், அவா் படைத்தளித்த மக்கள் நலன் திட்டங்களையும் ஓராண்டு முழுவதும் எடுத்துரைத்தாலும் முழுமையடையாது.
என்றாலும், தமிழகத்தின் வருங்காலத் தலைமுறையினா் அவரை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் நூற்றாண்டு விழாவை எழுச்சியோடும் உணா்ச்சியோடும் எங்கெங்கும் நடத்திட வேண்டும். குறிப்பாக திருச்சி தெற்கு மாவட்டத்தில் 12 மாதங்களும் ஒவ்வொரு நாளும் ஒரு நிகழ்வாக வேறு எங்கும் இல்லாத வகையில் சிறப்பாகவும், எழுச்சியோடும் நடத்த வேண்டும் என்றாா் அமைச்சா்.
நிகழ்வில் மாநகரச் செயலா் மு. மதிவாணன், லட்சுமணன், வண்ணை அரங்கநாதன், கோவிந்தராஜன், செங்குட்டுவன் உள்ளிட்ட மாவட்ட, மாநகர நிா்வாகிகள், பாலக்கரை பகுதி நிா்வாகிகள் எனப் பலா் கலந்து கொண்டனா்.