Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மர்மமான முறையில் வீட்டில் இறந்த கிடந்த ரயில்வே ஒப்பந்த ஊழியர்.

0

 

திருச்சியில் வீட்டுக்குள் பிணமாக ரெயில்வே ஒப்பந்த ஊழியர்.

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் வடமலை (வயது 60).இவர் ரெயில்வே ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 20 வருட காலமாக வடமலை மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில் அவரை அடிக்கடி அவரது அக்கா ஆனந்த புஷ்பா கவனித்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது அங்கு வடமலை இறந்த நிலையில் கிடந்தார் மேலும் அவர் சற்று அழுகிய நிலையில் இருந்ததால் துர்நாற்றம் வீசியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் வடமலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.