Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காதல் விவகாரம்: திருச்சி கல்லூரி மாணவியை குத்தி கொன்ற சிறுவன்.

0

 

திருச்சியில் கல்லூரி மாணவியை கொலை செய்த சிறுவன் கைது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் ஓமலூர் தெருவை சேர்ந்தவர் அழகு பாண்டி இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்தம்மாள். இவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் ஜோதிகா (வயது 18) இவர் திருச்சி தென்னூர் பாரதி நகரில் உள்ள தனது அத்தை மகாலட்சுமி (வயது 40) என்பவரது வீட்டில் தங்கியிருந்து சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்,
மேலும் மகாலட்சுமி மளிகை கடையிலும் வேலை பார்த்து வந்தார்.இந்த நிலையில் நேற்று மளிகை கடைக்கு வேலைக்கு சென்ற ஜோகிதா மாலை வீட்டுக்கு வந்தார். வீட்டில் தனியாக இருந்த ஜோகிதாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது அக்கா பவித்ரா வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது ஜோகிதா கழுத்து மற்றும் முதுகு பகுதியில் ஆயுதங்களால் குத்தப்பட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜோகிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து தில்லை நகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

போலீசார் விசாரணையில் திருச்சியை சேர்ந்த லோகநாதன் என்ற 17 வயது சிறுவன், ஜொகிதா இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் உறவினர்கள் ஆவார்கள். இரண்டு பேரும் அக்கா, தம்பி முறை வருகிறது. இதனால் பெற்றோர் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அந்த ஜோகிதா லோகநாதனிடம் பேசுவது நிறுத்திவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த லோகநாதன் சம்பவத்தன்று ஜோகிதா வீட்டுக்கு சென்று அவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார் என பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து லோகநாதனை கைது செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.