திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில்
இன்று அதிகாலை கமாண்டோ படையினர் துப்பாக்கியுடன் புகுந்ததால் பரபரப்பு .
இன்று அதிகாலை ஸ்ரீரங்கம் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர், அப்போது சாலையில் வழக்கத்திற்கு மாறாக வாகனங்கள் பறக்கும் ஓசை கேட்டது. இதில் தூக்கம் கலைந்தவர்கள் வீட்டிற்கு வெளியே எட்டிப் பார்த்தபோது ரங்கா ரங்கா கோபுரம் வடக்கு வாசல், வெள்ளை கோபுர வாசல் ஆகியவைகள் முன்பு 30 வாகனங்கள் சடன் பிரேக் அடித்தபடி நின்றன. அதிலிருந்து 150 க்கும் மேற்பட்ட கமாண்டோக்கள் கையில் துப்பாக்கி ஏந்தி கோயில் கதவுகளை இழுத்துத் திறந்து உள்ளே பாய்ந்தனர்.

இதை பார்த்து அப்பகுதியினர் மனதில் பீதியுடன் எட்டி நின்று வேடிக்கை பார்த்தனர். செல்போனில் நடக்கும் சம்பவங்கள் பற்றி விசாரித்துக் கொண்டனர்.
நீண்ட விசாரித்தலுக்கு பின்னர் கோவிலுக்குள் தீவிரவாதிகள் திடீரென்று புகுந்து விட்டால் அவர்களை எப்படி கையாண்டு பக்தர்களை காப்பாற்றுவது ?என்று கமாண்டோ படை பாதுகாப்பு குறித்த ஒத்திகை என்பது தெரியவந்தது.
இந்த ஒத்திகை இன்று அதிகாலை 2 மணி வரை மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா முன்னிலையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தால் ஸ்ரீரங்கம் பகுதியில் அதிகாலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.