எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்பு: திருச்சி எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார் தலைமையில் அதிமுகவினர் கொண்டாட்டம்
Edappadi Palanichamy accepts as General Secretary: Trichy MGR Youth League Secretary Muthukumar leads AIADMK celebration

இன்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அஇஅதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார்.
இதனை கொண்டாடும் வகையில் திருச்சி மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிந்தை முத்துக்குமார் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அப்பகுதியில் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாணவரணி இணை செயலாளர் செல்வகுமார்,குமார்,விக்கி, சேகர், உத்தண்டராமன், ஆட்டுகார சேகர், காளி அரிகரன் வி.கே.எஸ்.குமார் மற்றும் ஏராளமான அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

