Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஓடும் பஸ்ஸில் இன்ஜினியரின் லேப்டாப் திருட்டு

0

 

திருச்சியில்
ஓடும் பஸ்ஸில் இன்ஜினியரின் லேப்டாப் திருட்டு.

திருச்சி கலெக்டர் அலுவலக ரோடு குமுளி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 34)
இவர் பெங்களூர் ஐ.டி. கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் தனது லேப்டாப்புடன் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இருந்து மத்திய பஸ் நிலையம் செல்லும் ஒரு டவுன் பஸ்ஸில் வீடு திரும்பினார்.

பஸ் நிலையம் வந்ததும் லக்கேஜ் வைக்கும் பகுதியில் பார்த்தபோது லேப்டாப்பை காணாமல் திடுக்கிட்டார். மர்ம நபர்கள் ஓடும் பஸ்ஸில் லேப்டாப்பை திருடிக் கொண்டு இறங்கி சென்று விட்டனர். இதுகுறித்து குமார் கொள்ளிடம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.