திருச்சி காவிரி மேம்பாலம் வரும் 3ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் பேட்டி.
திருச்சி உறையூர் தாக்கர் ரோடு மற்றும் பஞ்சவர்ணசாமி கோயில் தெருக்களில் ரூபாய் 23.35 லட்சம் மதிப்பீட்டில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகளையும்,அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார் அமைச்சர் கே.என். நேரு
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஓட்டளிக்க செல்பவர்கள், கை சின்னத்திற்கு வாக்களிக்கும் நோக்கில் பூத் சிலிப்புகள் வாங்கி செல்கின்றனர். மிகப் பெரும்பான்மை ஓட்டு வித்தியாசத்தில் கைச்சின்னம் வெற்றி பெறும்.
ஸ்ரீரங்கம் காவிரி பாலத்தில் தார் போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மார்ச் 3ம் தேதிக்குள் அந்த பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டு விடும்.

ஓட்டளிப்பவர்களுக்கு வைக்கும் மை எப்படி அழியும்?
அ.தி.மு.க.,வினர் தோல்வி பயத்தில் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகளின் போது, பொதுமக்களுக்கு அசவுரியங்கள் ஏற்படத்தான் செய்யும். இருக்கும் ஒப்பந்த தாரர்களை வைத்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
நீண்ட கால தீர்வுக்கு பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
சேலம், நாகர்கோவில், சங்கரன்கோவில், சாத்தூர் போன்ற இடங்களில் குடிநீர் திட்ட பணிகள் விரைவு படுத்தப்பட்டு வருகிறது. கோடை காலத்தில், தமிழகம் முழுவதும் எந்த இடத்திலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டம் துவங்குவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது மேயர் அன்பழகன் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.