செல்போன் திருடியதாக புகார்:
திருச்சி ரவுடிக்கு அரிவாள் வெட்டு
வாலிபர் கைது.
திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் எலி என்கிற திருநாவுக்கரசு ( வயது 23 ). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பிரபல ரவுடி. இவர் அதே பகுதி மூன்றாவது தெருவைச் சேர்ந்த ஜேம்ஸ் மகன் ஹரிஹரன் (வயது 23) என்பவரின் செல்போனை திருடி விட்டாராம்.
இதனால் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஹரிஹரன் எலி என்கிற திருநாவுக்கரசை அரிவாளால் வெட்டியுள்ளார்
.இதில் காயம் அடைந்த திருநாவுக்கரசு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் வழக்கு பதிந்து ஹரிஹரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.