திருச்சி ரயில் நிலையம் முன்
டிக்கெட் பரிசோதகர்கள் இன்று ஆர்ப்பாட்டம்
தொடர் போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பு.
காலி ப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும், கோட்டை ரயில் நிலையத்தில் 4 டிக்கெட் பரிசோதகர்கள் நியமிக்கப்பட வேண்டிய இடத்தில் 7 பேரை நியமனம் செய்ததை கண்டித்தும்,திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அதிகப்படியாக 37 டிக்கெட் பரிசோதகர்கள் இருப்பதை கண்டித்தும்,
ராமேஸ்வரத்தில் உள்ள ஓய்வைறக்கு செல்ல சொந்த பணத்தை செலவு செய்யும் அவல நிலையை கண்டித்தும்,சி.சி.எல் விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்படுவதை கண்டித்தும், பெண் டிக்கெட் பரிசோதகர்களுக்கு முறையான ஓய்வறை இல்லாததை கண்டித்தும், கொரோனா காலகட்டத்தில் போடப்பட்ட பணி முறை இன்றும் தொடர்வதை கண்டித்தும் திருச்சி ரயில் நிலையம் முன்பு டிக்கெட் பரிசோதகர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு
டி.ஆர். இ.யு கோட்ட தலைவர் கரிகாலன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர்கள் ராஜா, சரவணன்,உதவி செயலாளர் சிவக்குமார் மற்றும் டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர் இதுகுறித்து டிக்கெட் பரிசோதகர்கள் கூறுகையில், எங்கள் முறையான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர்.