திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர், கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க,
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை (24.2.2023, வெள்ளிக்கிழமை) திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட, மாவட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, கிளை, வார்டு, வட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணிகள் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றினார். வரும் கழகத்தினர் அனைவரும் தங்களது பகுதிகளில் அம்மாவின் திருஉருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும், மேலும் ஏழை எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என மாவட்ட செயலாளர் ப.குமார் தெரிவித்துள்ளார்.