திருச்சி உறையூர் குழுமாயி அம்மன் கோயில் அருகே துரை மற்றும் அவரது தம்பி சோமு உள்ளிட்ட இரண்டு ரவுடிகளும் போலீசாயை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்ற போது போலீசார் அவர்களை துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர்.இதில் இன்ஸ்பெக்டர் மோகன் உள்ளிட்ட மூன்று போலீசாரம் ரவுடிகள் துரை சோமு ஆகிய ஐந்து பேரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பின்னர் சம்பவத்தை பார்வையிட்டு திருச்சி போலீஸ் கமிஷனர் சத்யபிரியா சம்பந்தப்பட்ட ரவுடிகள் இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் நினைவில் உள்ளது.இந்நிலையில் பழைய வழக்கில் விசாரணைக்காக போலீசார் அவர்களை அழைத்துச் சென்ற போது அவர்கள் போலீசாரை அரிவாளால் தாக்கி விட்டு தப்பிக்க முயன்று உள்ளனர் இதனால் போலீசார் தற்பாதுகாப்புக்காக அவர்களை துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.இது போலீசார் தாக்கும் அல்லது தாக்க நினைப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் எனக் கூறினார்.
முன்னதாக ரவுடிகளின் தாய் மல்லிகா (வயது 58) (க|பெ நாகரத்தினம்) போலீஸ் கமிஷனர் சத்யபிரியாவுக்கு அனுப்பிய புகார் மனுவில் கூறியிருப்பதாவது;-
நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன்.என்னுடைய மகன் துரை(எ)துரைசாமி மீது சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது திருந்தி வாழ்ந்து கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சுமார் 4மணி அளவில் எனது உறவினர் அனுராதா என்பவரின் வீட்டில் இருந்த என் மகனை சீருடை அணியாத தனிப்படை காவல்துறையினர் 10பேர் கொடூரமாக தாக்கி இழுத்து சென்றுள்ளனர்.
பின்னர் என் மகனை என்கவுண்டர் செய்யப்போவதாகவும், எவ்வித கெட்ட பழக்கமும் இல்லாத என் மகன் மீது கஞ்சா வழக்கு போடுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
எனவே தாங்கள் திருந்தி வாழ்ந்து வரும் என் மகனை காவல்துறையினர் என்று கூறி அழைத்துச்சென்ற நபர்களிடம் இருந்து மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.
இவரின் இந்த மனுவின் அடிப்படையில் என்கவுண்டர் செய்யப்பட இருந்த ரவுடிகள் மீது இந்த லேசான துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.தாயாரின் மனுவால் உயிர் பிழைத்தனர் இந்த ரவுடிகள்