திருச்சியில் பட்டு துணி பண பயன்பாடு
சிறப்பு சொற்பொழிவு.
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்பு சங்கம் திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் இணைந்து பட்டுத்துணியிலான பண பயன்பாடு சிறப்பு சொற்பொழிவு நிகழ்வினை புத்தூர் கிளை நூலகத்தில் நடத்தியது.
நூலகர் நாகராஜன் வரவேற்றார். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்பபோர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். பணத்தாள்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர் பட்டுத்துணி பண பயன்பாடு குறித்து பேசுகையில்,
பட்டு என்பது ஒரு பன்முகத் துணி ஆகும். உயர்தர ஆடைகள் முதல் ஆடம்பரமான வீட்டு அலங்காரங்கள் வரை, பட்டு பயன்படுத்தப்படுகிறது. இது மென்மையான துணியாகும்.
பட்டு துணியினை பணமாக
டாங் வம்சத்தினர் பயன்படுத்தினர்.
கிமு 202 இல் ஹான் வம்சத்தினர் பட்டுப் பாதையைத் தொடங்கினர் மற்றும் மத்திய ஆசியாவிற்கும் மேலும் வெளிநாடுகளுக்கும் வர்த்தக வழிகளை நிறுவினர். 800 ஆண்டுகளுக்குப் பிறகு, டாங் வம்சம் சிக்கலான நிதி மற்றும் வரி முறையை உருவாக்கியது, இது ஜவுளி, நாணயங்களுடன், பணமாக அங்கீகரிக்கப்பட்டது.
பட்டு ரூபாய் நோட்டுகள்
டாங் வம்சத்திற்கு நீண்ட காலத்திற்குப் பிறகு, பட்டு பண்டமாற்று முறையில் பயன்படுத்தப்பட்டபோது, உலகின் பல்வேறு பகுதிகளிலும், பட்டுப் பணமாகப் பயன்படுத்தப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டில் சிறிய பட்டுத் துண்டுகளில் பணத்தை அச்சடித்து அவற்றை ரூபாய் நோட்டுகளாகப் பயன்படுத்தத் தொடங்கினர். ஜெர்மனியில், பட்டுப் பணத்தைப் பயன்படுத்துவது தற்காலிகமானது, உள்ளூர் அல்லது பிராந்திய அரசாங்கத்தின் தேவைகள் அல்லது காகிதத் தட்டுப்பாட்டால் 1923 ஆம் ஆண்டில், பொருளாதார நெருக்கடியின் போது, பல ஜெர்மன் நகரங்களில் பட்டுப் பணம் “அவசரப் பணம்” என்று புழக்கத்தில் இருந்தது இதைப் போல வரலாற்று தகவல்களை அறிந்து கொள்ள ஒவ்வொருவரும் வரலாற்று நூல்களை அவசியம் படிக்க வேண்டும் என்றார்.
நாணயங்கள் சேகரிப்பாளர்கள் ரமேஷ் லட்சுமி நாராயணன் அரிஸ்டோ சந்திரசேகரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் முன்னதாக செயலர் குணசேகரன் வரவேற்க, பொருளாளர் அப்துல் அஜீஸ் நன்றி கூறினார்.