Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விராலிமலை:நீர் பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி காந்தியவாதி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அமர்ந்து போராட்டம்.

0

'- Advertisement -

விராலிமலை நீர் பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி காந்தியவாதி செல்வராஜ் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மேலே அமர்ந்து போராட்டம்.

விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் சத்திரத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில் சிலர் ஆக்கிரமித்து, வணிக கடை, குடியிருப்பு என கட்டி நீண்ட நாட்களாக இருந்து வருகின்றனர் இந்த நிலையில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் காந்தியவாதி செல்வராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Suresh

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி தருமாறு வருவாய் துறை மற்றும் உள்ளாட்சித் துறையினருக்கு அறிவுரை வழங்கி இருந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு நீதிமன்றத்திற்கு சென்று குறிப்பிட்ட கால தடையானை பெற்றனர்.

இதனை அடுத்து தற்போது அந்த தடையானையின் காலம் முடிந்ததால் உடனடியாக அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி தருமாறு கோரி காந்தியவாதி செல்வராஜ் என்பவர் கையில் தேசிய கொடியுடன் விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மேலே ஏறி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் லாபகமாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி படிகளில் ஏறி அவர் பின்னால் சென்று அவரை கட்டியணைத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே அழைத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அவரது கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.