தெற்காசியா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று திருச்சி திரும்பிய வீரருக்கு மமக, தமுமுக சார்பில் சிறப்பான வரவேற்பு.
தெற்காசியா அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பூடானில் நடைபெற்றது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ். நேபாளம்,ஸ்ரீலங்கா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் மூலம் லால்குடி சிறுகையூர் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் சாகுல் ஹமீது போட்டியில் கலந்து கொள்ள அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சாகுல் ஹமீது தடகளப் போட்டியில் பங்கேற்றார். இறுதியில் மும்முறை தாண்டும் விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
நேற்றைய தினம் அவருக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் முஹமது ராஜா, செயலாளர் அஷ்ரப் அலி,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக செயலாளர் முகமது இலியாஸ், துணைத் தலைவர் முஸ்தபா, துணை செயலாளர் ரம்ஜான் அலி ஆகியோர் வரவேற்றனர்.
தமிழகத்துக்கும், நாட்டுக்கும் பெருமை தேடித்தந்த அவருக்கு வேலைவாய்ப்பினை வழங்கி மத்திய மாநில அரசுகள் உதவிட வேண்டும். மேலும் சிறந்த வழிகாட்டுதல் கிடைத்தால் விளையாட்டு துறையில் என்னால் பெரிய அளவுக்கு சாதிக்க முடியும் என்றார்.