திருச்சி
ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் கோ பூஜை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

திருச்சி தலைமை தபால் நிலையம் ரவுண்டானாவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலில் தை மாத மூல நட்சத்திர வைபவத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) உலக நன்மைக்காகவும் சகல கிரக தோஷ நிவர்த்திக்காகவும் கோ பூஜை நடத்தப்பட உள்ளது.
முன்னதாக அன்றைய தினம் காலை 9 மணிக்கு ஸ்ரீ மகா சுதர்சன ஹோமம் நடத்தப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு கோ பூஜை நடக்கிறது. மேலும் மதியம் 12 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சன பூஜை நடைபெறுகிறது.
அதன் தொடர்ச்சியாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை அர்ச்சகர் சுரேஷ் என்கிற செந்தாமரை கண்ணன் மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.