Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஆர் சி பள்ளியில் தேசிய பசுமைப்படை மாணவர்களின் காற்று மாசு தடுப்பு விழிப்புணர்வு பேரணி.

0

திருச்சி ஆர்.சி. பள்ளியில்
தேசிய பசுமை படை மாணவர்களின் காற்று மாசு தடுப்பு விழிப்புணர்வு பேரணி.
உதவி போலீஸ் கமிஷனர் கென்னடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு
அரசு சுற்றுச்சூழல் துறை திருச்சி மாநகராட்சி, மத்திய மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், திருச்சி மாவட்ட பள்ளி கல்வித்துறை, தேசிய பசுமை படை இணைந்து நடத்திய காற்று மாசு விழிப்புணர்வு பேரணி திருச்சி ஆர்.சி. பள்ளி மைதானத்தில் இருந்து தொடங்கியது. பேரணியை கண்டோன்மென்ட் உதவி போலீஸ் கமிஷனர் கென்னடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் செல்வி முன்னிலை முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்வில் பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அருட்பணி சின்னப்பன் அடிகளார், உதவி தலைமை ஆசிரியர் லூர்து சகாயராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சிக்கான முகப்புரையினை தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாயராஜ் விளக்கிப் பேசினார்.
முன்னதாக ஆசிரியர் லூயிஸ் வரவேற்றார்.

இந்த நிகழ்வில் மாநகராட்சி சார்பாக இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார். ஆசிரியர் தாமஸ் மரிய சூசை நன்றி கூறினார். ஆர்.சி. பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்த பேரணி சேவா சங்கம் பள்ளியில் நிறைவடைந்தது. பேரணியை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை நாகம்மை மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் விஜயேந்திரன் ஆகியோர் நிறைவு செய்து வைத்தனர்.

இதில் திருச்சி மாநகர் பகுதியைச் சேர்ந்த 12 பள்ளிகளை சேர்ந்த தேசிய பசுமை படை மாணவ மாணவிகள் 350 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.