Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இன்றைய கிரைம் செய்திகள்.

0

'- Advertisement -

1.
கேகே நகரில்
மூதாட்டி மாயம்

திருச்சி கே.கே.நகர் ரெங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் இவரது மனைவி மீனா பார்வதி (வயது 60)சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து அருகில் உள்ள காய்கறி கடைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவரது மகன் பாரதி மாசிலாமணி கே.கே. நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனா பார்வதியை தேடி வருகின்றனர்.

2.
அரியமங்கலத்தில்டடெய்லர்
திடீர் சாவு .

திருச்சி உக்கடை அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சையது நசுருதீன் (வயது 52) டெய்லர். சமீபத்தில் இவரது மனைவி இறந்த காரணத்தால் வீட்டில் இருந்து வெளியேறி தனியாக நசுரூதீன் வசித்து வந்தார். இந்த நிலையில் திடீரென்று அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது இதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சையது நசுருதீன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3.
ஏடிஎம்மில் பணம் எடுத்து உதவுவதாக நடித்து
திருச்சியில் பெண்ணிடம் பணத்தை திருடிய வாலிபர் கைது .

திருச்சி மேல சிந்தாமணி. கரூர் பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன்.இவரது மனைவி உஷா (வயது 44). சம்பவத்தன்று இவர் சிந்தாமணி பஜார் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றார். அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணத்தை எடுக்க உதவி கேட்டார். இதை அடுத்து அந்த வாலிபர் உஷாவின் ஏடிஎம்மை கார்டை வாங்கி ரூ 3000 பணத்தை எடுத்து அவரிடம் கொடுக்காமல் அந்த பணத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இது குறித்து உஷா கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்துக்கிடமாக அந்தப் பகுதியில் சுற்றி திரிந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்திய போது கரூர் மாவட்டம் நங்கவரம் பகுதியை சேர்ந்த சரவணகுமார் (வயது 29) என்ற வாலிபர் தான் உஷாவிடம் பணத்தை திருடியது தெரிய வந்தது.இதையடுத்து சரவணகுமாரை கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். சரவணகுமார் மீது கேவை, திண்டுக்கல், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.