ஸ்ரீரங்கத்தில் பீடி பற்ற வைத்த நெருப்பு படுக்கையில் விழுந்து விபத்து. முதியவர் கருகி சாவு.
கீதாபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு (வயது 80). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனது படுக்கை அறையில் உட்கார்ந்து கொண்டு பீடியை பற்ற வைத்து பிடித்துக் கொண்டு இருந்தார். அப்போது அந்த பீடியில் இருந்த தீ படுக்கையில் இருந்த போர்வையில் பட்டு தீ பிடித்தது. சிறிது நேரத்தில் போர்வையில் பிடித்து தங்கவேல் உடலில் தீ பரவி இருந்தது.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த நிலையில் தங்கவேலு திருவரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த தங்கவேலு பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.