Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் டீக்கடை கூரையை பிரித்து 12 ஆயிரம் திருட்டு: ஓடும் பஸ்ஸில் பெண்ணின் 6 பவுன் செயின் பறிப்பு.

0

'- Advertisement -

1.
திருவெறும்பூரில்
டீக்கடை கூரையை பிரித்து பணம், செல் போன் திருட்டு.

திருச்சி தெற்கு காட்டூர் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 42) இவர் கூத்தை பார் பேரூராட்சி கட்டிடத்தில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். வழக்கம் போல் இரவு 9 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
பின்னர் காலையில் வந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் பின் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 12,000 ரொக்க பணம் மற்றும் ரூபாய் 5000 மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை காணவில்லை என தெரியவந்தது. இது தொடர்பாக மணிமாறன் திருவெறும்பூர் போலீஸ் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2.
நம்பர் ஒன் டோல்கேட் அருகே
கோவிலுக்கு சென்ற பெண்ணின் 6 பவுன் செயின் பறிப்பு
பஸ் கூட்ட நெரிசலில் கைவரிசை.

விருதுநகர் மாவட்டம் சூலக்கரை மேடு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி விஜயலட்சுமி ( வயது 62). வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இவர் தனது உறவினர்களுடன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமியை தரிசிப்பதற்காக திருச்சி வந்து ரங்கநாதர் கோவிலுக்கு சென்று உறவினர்களுடன் சாமி தரிசனம் செய்துவிட்டு உத்தமர் கோவிலுக்கு செல்ல ஸ்ரீரங்கத்தில் இருந்து பஸ்ஸில் ஏறினர். பின்னர் நம்பர் ஒன் டோல்கேட் சேலம் பஸ் நிறுத்த பகுதியில் அவர்கள் இறங்கினர். அப்போது விஜயலட்சுமி .எதார்த்தமாக கழுத்தில் கை வைத்து பார்த்த போது தனது ஆறு பவுன் செயினை காணாமல் திடுக்கிட்டார். பஸ்ஸின் கூட்டத்தில் இருந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த ஆறு பவுன் தாலிச் சேனை பறித்து சென்று விட்டனர். இது தொடர்பாக விஜயலட்சுமி கொள்ளிடம் போலீசில் புகார் செய்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.