திருச்சி அருகே இன்று வேளாங்கண்ணி அரசு பஸ் கவிழ்த்து ஒருவர் பலி.
திருச்சி அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில் வேளாங்கண்ணி அரசு பஸ் கவிழ்ந்தது. இதில் ஒருவர் பலியானார். 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இன்று அதிகாலை நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
பெங்களூருவில் இருந்து, வேளாங்கண்ணி நோக்கி அரசு விரைவு பஸ் சென்று சென்று கொண்டிருந்தது.
இதில் சுமார் 40 பயணிகள் இருந்தனர். அரசு விரைவுப் பேருந்து, அதிகாலை, திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலை மஞ்சக்கோரை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை பஸ் இழந்து கவிழ்ந்தது.
இதில் ஒரு பயணி கை முறிந்து பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார் .
அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார் .
மேலும் 11 பயணிகள் காயம் அடைந்தனர். காயமடைந்த பயணிகள் அனைவரும் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று பஸ்ஸை தூக்கி மீட்டனர் இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.