Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி இனாமாத்தூர் அரசு பள்ளியில் மரபுசாரா எரிசக்தி காற்றாலை மின் உற்பத்தி துவக்க விழா.

0

திருச்சி இனாம்மாத்தூர் அரசு பள்ளியில்
மரபுசாரா எரிசக்தி காற்றாலை மின் உற்பத்தி துவக்கவிழா.

திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத்துறை மற்றும் புதுடெல்லி மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உன்னத் பாரத் அபியான் 2.0 திட்டத்தின் வாயிலாக மரபு சாரா எரிசக்தி காற்றாலை மின் உற்பத்தி தொடக்கவிழா இனாம் மாத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

கிராமபுற மக்களின் மேம்பாட்டிற்காகவும், உலகம் முழுவதும் அதிக எரி பொருள் பயன்பாட்டின் வழியாக கரிய அமில வாயு அளவு அதிகரிக்கின்றது இதனால் உலக வெப்பமயமகுதலால் பாதிப்புக்குள்ளாகிறது.அதனை குறைப்பதற்கும் பள்ளி மாணவர்களின் அறிவியல் தொழில் நுட்பத்தையும், அறிவியல் திறன்களை மேம்படுத்தி கொள்ளவும் சிறிய அளவில் காற்றாலை மின் உற்பத்தி அலகு நிறுவப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் செயின்ட் ஜோசப் கல்லூரியின் முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் தலைமை உரையாற்றினார். செப்பர்டு விரிவாக்கத்துறையின் இயக்குநர் பெர்க்மான்ஸ் தொடக்க உரையாற்றினார்.
விரிவாக்கத்துறையின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் ஜெயசந்திரன் உன்னத் பாரத் அபியான் பற்றி திட்ட விளக்கவுரையாற்றினார்.இயற்பியல் துறை பேராசிரியர் முனைவர் அலெக்சாண்டர் பள்ளி மாணாக்கர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

மணிகண்டம் ஒன்றிய குழுதலைவர் கமலம் கருப்பையா,
மணிகண்டம் ஒன்றிய திமுக செயலாளர் மாத்தூர் கருப்பையா,
மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பாரதிதாசன்,அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அகிலா பாஸ்கர் விரிவாக்கத்துறையின் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா, விஜயகுமார்,
பூரண விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
விரிவாக்கத்துறையின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் வந்தவர்களை வரவேற்றார். முடிவில் அரசுப்பள்ளி ஆசிரியர் ஜான் கென்னடி நன்றி கூறினார். விரிவாக்கத்துறையின் ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன், ஜோசப் கிறிஸ்துராஜா ஆகியோர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினார்கள், கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.