Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

0

திருச்சியில் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து முதியவர் பலி.

திருச்சி தில்லை நகர் 1-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல் (வயது 23). சாப்ட்வேர் இன்ஜினியர். சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் சுமதி. கனடா நாட்டில் சகோதரியுடன் உள்ளார். இவரது தந்தை சீனிவாசன் (வயது 59.).இவர் புத்தூர் பாரதி நகரில் உள்ள வீட்டில் இருந்தபோது மாடிப்படியில் இருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்துவிட்டார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.