Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பெற்றோர் பேசாததால் விஷம் குடித்து, ஜேசிபி டிரைவர் தற்கொலை

0

 

திருச்சியில் ஜேசிபி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை.

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் நாகேஷ் .இவருடைய மகன் பழனி (வயது 34). இவர் ஜேசிபி டிரைவராக பணியாற்றி வந்தார்.

இவருடைய உறவினர் மகன் கார்த்தி என்பவர் ஜீவா என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார்.

திருமணத்திற்கு பின் கார்த்தி இறந்து விட்டார். அவர் இறந்த பிறகு தனது பெற்றோருக்கு தெரியாமல் கார்த்தியின் மனைவி ஜீவாவை பழனி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் .இது பற்றி அறிந்த பழனியின் பெற்றோர் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டனர்.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பழனி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்த பொன்மலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பழனியின் தாயார் தமிழரசி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.