திருச்சியில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அன்னதானம், நலத்திட்டம் வழங்கி புகழஞ்சலி.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழக முதலமைச்சரும், எதிர்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாரும் முன்னாள் அமைச்சரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம் எம்.எல்.ஏ ஆகியோரின் ஆணைக்கிணங்கவும்.,திருச்சி மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜனின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு முன்னிட்டு இன்று திருச்சி கோர்ட் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். திருஉருவ சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் திருஉருவ படத்திற்க்கு திருச்சி அ.இ.அ.தி.மு.க. மாநகர் மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் ராஜ்குமார்,அம்மா பேரவை மாவட்ட செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தப்பட்டது.
மேலும் திருச்சி மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதிகளில் உள்ள அனைத்து வட்ட கழகத்திலும் அம்மா அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டம், அன்னதானம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் பாலக்கரை பகுதி செயலாளர் சந்திரன், உறையூர் பகுதி பிரதிநிதி தென்னூர் பிரேம்,மாவட்ட இளைஞரணி ரஞ்சிதாபுரம் சந்துரு மற்றும் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட கழக, பகுதி கழக, வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், மாண்புமிகு அம்மா பேரவை.எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு. இலக்கிய அணி, மருத்துவ அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவினை சேர்ந்தவர்கள், வர்த்தக அணி, கலை பிரிவு. முன்னாள் கோட்டத் தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள். கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள், தலைமை கழக பேச்சாளர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்துக்கொண்டனர்.