Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சுமை பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

0

திருச்சியில் இன்று
சி ஐ.டி.யு. சுமை பணி தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.

சுமை பணி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும்.
ஐ.எல்.ஓ. ஒப்பந்தப்படி 100 கிலோ மூட்டை சுமைப்பதற்கு தடை செய்ய வேண்டும்.

நகர்ப்புற வீட்டு வசதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அடுக்கு மாடி குடியிருப்புகளில் சுமை பணி தொழிலாளர்களுக்கு வீடு வழங்கிட வேண்டும்.

நலவாரிய பலன்களை இரட்டிபாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகாமையில் இருந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு பேரணியாக வந்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சுமை பணி சிஐடியு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.


செயலாளர் ரங்கராஜன், சுமைப்பணி சம்மேள மாநில செயலாளர் அருள்குமார், செயல் தலைவர் குணசேகரன், திருச்சி மாவட்ட சிஐடியு தலைவர் சீனிவாசன், பொருளாளர் மணிகண்டன், துணைச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

முடிவில் சுமைப்பணி சிஐடியு மாவட்ட பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் திரளான சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.