Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அண்ணியை கொலை செய்த கார் ஓட்டுனருக்கு ஆயுள் தண்டனை.

0

தனது அண்ணியை கொலை செய்த
கார் ஓட்டுநருக்கு திருச்சி கோர்ட்டில்  ஆயுள் தண்டனை.

இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவது:-
திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள தாளக்குடி வடக்கு காலனியைச் சேர்ந்தவர் ஒ. சந்துரு என்கிற பாலச்சந்தர் (வயது 42). கார் ஓட்டுநர். அவரது அண்ணன் அன்புராஜ் மனைவி ராஜலெட்சுமி (38). கீழவாளாடி பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார்.
இவர்களுக்கிடையே ஏற்கெனவே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது . இந்நிலையில் சந்துரு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கடன் வாங்கி உரிய காலத்தில் திருப்பிக் கொடுக்கவில்லையாம். கடன் கொடுத்த நபர், கடந்த 1998 ஆம் ஆண்டு செப்டெம்பர் 19 ஆம் தேதி கடனை வசூலிக்க வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது, சந்துரு வெளியே சென்றிருந்தாராம். அவர் வீட்டில் நிறுத்தியிருந்த நண்பரின் இருசக்கர வாகனத்தை  கடன் கொடுத்தவர் எடுத்துச் சென்று விட்டார்.
தகவலறிந்து வீடு வந்த சந்துரு, ஆத்திரமடைந்து தனது தாயாரிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் பிற்பகலில் பணி முடிந்து வீடு திரும்பிய ராஜலெட்மிக்கு விஷயம் தெரியவரவே, அவர் தனது கணவருக்கு செல்லிடப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்துரு, அனைத்துக்கும் நீதான் காரணம் எனக்கூறி ராஜலட்சுமியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலயே ராஜலெட்சுமி  உயிரிழந்தார்.

இது குறித்து நெ.1 டோல்கேட்,  கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, திருச்சி மாவட்ட 3 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இருதரப்பு விசாரணைகள் முடிந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதில், கொலைக்குற்றம் நிரூபணம் ஆனதையடுத்து சந்துருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5000 அபராதமும் விதித்து நீதிபதி தங்கவேல் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக  ஆனந்தன் வாதாடினார்.

Leave A Reply

Your email address will not be published.