திருச்சியில்
பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள்
திருச்சி
அதவத்தூரில் உள்ள செயின்ட் ஜோன்
ஆப் ஆர்க் இன்டர்நேஷனல் பள்ளியில் ஜோன் ஃபெஸ்ட் 2022 எனும் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டி நடைபெற்றது. .
பள்ளி தாளாளர் நாகவேணி சந்திரசேகரன் ஜோன் ஃபெஸ்ட் போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் 13 விதமான போட்டிகள் நடத்தப்பட்டது. 25 க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணிக்கு நிறைவடைந்தது.
முடிவில் விஜய் டி.வி. புகழ் நடிகர் வினோத் பாபு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களையும் வழங்கி வெற்றி பெற்றவர்களை உக்குவித்தார்.