Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

படிக்க சொல்லி தாய் திட்டியதால் பள்ளி மாணவி மாயம்.

0

'- Advertisement -

படிக்கச் சொல்லி தாய் திட்டியதால் மாணவி மாயம்.

Suresh

திருச்சி திருவெறும்பூர் அசூர் தெற்கு தேனேரி பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மஞ்சுளா. இந்த தம்பதியருக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார்.இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் மஞ்சுளா படிக்காததை காரணம் காட்டி மகளை திட்டியதாக கூறப்படுகிறது.
அதை தொடர்ந்து சிறுமி வீட்டிலிருந்து திடீரென மாயமானார்.
இதுகுறித்து மஞ்சுளா துவாக்குடி போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

இதேபோன்று திருச்சி இனாம்குளத்தூர் அம்மாபேட்டை பகுதியில் கணவரை பிரிந்து தாய் வீட்டில் கடந்த 7 வருடங்களாக வசித்து வந்த ஜென்சி ( 39) என்ற பெண்மணி திடீரென மாயமானார். அவரது தந்தை ஜேம்ஸ் தன்ராஜ் தோட்டத்திற்கு சென்ற நிலையில் வீட்டில் இருந்த ஜென்சி மாயமானதாக கூறப்படுகிறது.
இது பற்றி இனாம் குளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜென்சியை தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.