தடகள வீரர்களை பாராட்டி, பரிசுகள் வழங்கப்பட்டது
திருச்சி மாவட்டத்தில் சென்ற மாதம் நடந்த தடகள போட்டியில் 16வயது மகளிர் பிரிவில் ஒட்டு மொத்த மதிப்பெண் பெற்றும், 100 மீட்டர் ஒட்டத்தில் தங்க பதக்கமும் பெற்றும், திருச்சி மாவட்ட அளவில் 16 வயது பிரிவில் 100 மீட்டர் ஒட்டத்தில் 12.05 ரிக்கார்டு வைத்து உள்ளவரும்,தடகள வீரர்களுக்கு பாராட்டி, பரிசுகள் வழங்கப்பட்டது..
வருகிற13.10.22 to 16.10.22 திருவண்ணாமலை மாநில அளவில் நடக்க இருக்கும் தடகள போட்டியில் கலந்துக் கொள்ள இருக்கும் எஸ்.ஜனனியை ஆப்பிள் மில்லட் நிறுவனர் துரை.வீரசக்தி அவர்கள் பாராட்டி தடகள போட்டியிற்கு தேவையான பொருள்கள் கொடுத்துடன். மேலும் 600 மீட்டர் தடகள போட்டியில் கலந்துக் கொள்ள இருக்கும் செந்திவேலுக்கும் தடகள போட்டியிற்கும் தேவையான ரூ.10,000 மதிப்பிலான விளையாட்டு பொருள்களை கொடுத்து வாழ்த்தி தெரிவித்தார்.
மேலும் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம், தடகள வீரர்களை பாராட்டியதுடன் , ஆப்பிள் மில்லட் துரை.வீரசத்தி அவருக்கு நன்றியை தெரிவித்தார்.
இதில் கோல்டன் தடகள சங்க பயிற்சியாளர் எம்.கனகராஜ் மற்றும் கோல்டன் தடகள சங்க வீரர்கள் கலந்துக் கொண்டார்கள்.