திருச்சி அரசு மருத்துவமனை
நர்சிங் பயிற்சி பள்ளி மாணவி திடீர் மாயம்.
திருச்சி புத்தூரில் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.
இதன் வளாகத்தில் நர்சிங் பயிற்சி பள்ளி ஒன்று உள்ளது .இங்கு மதுரை உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மகள் சுருதி (வயது 20) என்பவர் நர்சிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நர்சிங் பயிற்சி வகுப்பிற்கு சென்ற அவர் மீண்டும் திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜோதி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவம்
இதேபோன்று மற்றொரு சம்பவத்தில் திருச்சி உறையூர் நவாப் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வீரன் என்கிற சுப்பிரமணியன் என்பவரை காணவில்லை. இதுகுறித்து அவரது மனைவி பிரியா கொடுத்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.