மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல் ஆலோசனை வழங்கினார்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த முடிவு.
மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (16ஆம் தேதி) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது.

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறயுள்ளது.
இது தொடர்பான மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடந்தது .
கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ரத்தினவேல் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். அப்போது அவர் பேசும்போது, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது மின்வெட்டு வந்து விடும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. இப்போது மின் கட்டணத்தை 3 மடங்கு உயர்த்தி உள்ளது. இந்த ஆட்சியின் அவலத்தை வெளிப்படுத்த நாளை மறுநாள் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன், ஆவின் தலைவரும் மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் கார்த்திகேயன்,
மாவட்ட துணை செயலாளர்கள் பத்மநாதன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குப்தா, நாகநாதர் பாண்டி, அன்பழகன் மற்றும் அணி நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், வண்ணாரப்பேட்டை ராஜன் உள்ளிட்ட உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.