Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மின் உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அறிக்கை.

0

'- Advertisement -

Suresh

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி அறிக்கை:-

முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பின்படி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் விடியா திமுக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 16.9.2022 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் மண்ணச்சநல்லூர் பெட்ரோல் பங்க் அருகில் நடைபெற உள்ளது.

அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் திரளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்
என மு.பரஞ்ஜோதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.