Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம்.பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்த எஸ் டிவி பாலுவை பாராட்டிய அமைச்சர் நேரு.

0

திருச்சியில் புரட்டாசி மாதத்தில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம் நிகழ்வு திருச்சி பறவைகள் சாலையில் உள்ள வாசவி மஹாலில் எஸ் டிவி மற்றும் அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் இன்று தொடங்கி வருகிற 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் இன்று காலை 8.30 மணி அளவில் வேளுக்குடி உ. வே .கிருஷ்ணன் துவக்க சொற்பொழிவு நிகழ்ச்சியும் மாலை 6.30 மணி அளவில் கருணாகரச்சாரியார் சுவாமி திவ்ய தேசங்களின் பெருமை குறித்து சொற்பொழிவு ஆற்றினார்.

நாளை அக்டோபர் 1-ந் தேதி மாலை 6.30 மணிக்கு பேராசிரியர் விஜய சுந்தரியின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற உள்ளது.

அக்டோபர் 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கவிதா ஜவகர் கண்ணன் நம் தோழன் என்ற தலைப்பில் பேசுகிறார் .

அக்டோபர் 3-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு ஞானசம்பந்தன் கிருஷ்ணன் தூது என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றுகிறார்.

4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஸ்ரீமதி சுசித்ரா ஹரிகதை சொற்பொழிவும்,

5 ந் தேதி (புதன்கிழமை) மாலை 6:30 மணிக்கு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் கலைமாமணி ராஜேஷ் வைத்யாவின் இன்னிசை நிகழ்வு நடக்கிறது.

6-ந் தேதி (வியாழக்கிழமை) கவிஞர் மணிகண்டன்
ராமன் காட்டிய வழி என்ற தலைப்பிலும்,

7. ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருவண்ணாமலை எழிலரசியின் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடக்கிறது.

8-ந் தேதி மாலை 6:30 மணிக்கு டாக்டர் ஸ்ரீ உ.வே.வெங்கடேஷ் ஆழ்வார்களும், நவராத்திரியும் என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றுகிறார்.

புரட்டாசி மாதத்தில் திருச்சியில் ஒரே இடத்தில் நடக்கும் 108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம் நிகழ்ச்சியை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் இந்த நிகழ்வை சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் ஏற்பாடு செய்துள்ள எஸ் டி வி உரிமையாளர் பாலசுப்பிரமணியனை அமைச்சர் வெகுவாக பாராட்டினார்.

தொடக்க விழா நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், தொழிலதிபர் கே.என்.அருண் நேரு, சுந்தர் பட்டர்,மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,மாவட்ட துணை செயலாளகள் முத்துசெல்வம்,விஜயா ஜெயராஜ்,கோட்டத் தலைவர் துர்கா தேவி,வழக்கறிஞர் பாஸ்கர் மற்றும் ஏராளமானோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியினை மிக பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் ஏற்பாடு செய்திருந்த
எஸ் டிவி உரிமையாளர் பாலு (எ) பாலசுப்பிரமணியன் மற்றும் தொழில் அதிபர் கார்த்தி (எ) ஆறுமுகமும் கூறுகையில் திவ்யதேச பெருமாளின் தரிசனத்தை கண்டுகளிக்க டிக்கெட் முன்பதிவு செய்யலாம் . மேலும் இந்த பெருமாள் தரிசனத்தை அனைவரும் ஒரே இடத்தில் கண்டு களித்து, பெருமானின் திருவருளை பெற பெற அன்புடன் அழைக்கின்றோம் எனக் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.