

திருச்சியில் 9 வயது மகளுடன் தாய் திடீர் மாயம்.
மற்றொரு சம்பவத்தில் சிறுவன் மாயம்.
திருச்சி வயலூர் மெயின் ரோடு அம்மையப்பன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மனைவி பரமேஸ்வரி (வயது 28) இவர்களது மகள் கீர்த்தனா வயது 9 சம்பவத்தன்று தனது மகள் கீர்த்தனாவுடன் பரமேஸ்வரி கடைக்குச் சென்றார் பின்னர் வீடு திரும்பவில்லை இது குறித்த புகாரின் பெயரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜோதி வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றார்.
மற்றொரு சம்பவத்தில் திருச்சி கே.கே.நகர் பென்சனர் காலனியைச் சேர்ந்த வீரமணி மகன் பாலமருது ( வயது 15) என்பவர் சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்றவரை காணவில்லை. இது குறித்து கேகே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

