திருச்சியில் அதிகரித்து வரும் மர்ம காய்ச்சல்.உடனடி நடவடிக்கை எடுக்க மநீம மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் கோரிக்கை.
திருச்சியில் அதிகரித்து வரும் மர்ம காய்ச்சல்….? சுகாதாரத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். என திருச்சி தெற்கு மாவட்ட
மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வேண்டுகோள்.
கடந்த இருபது நாட்களாக திருச்சியில் உள்ள பெரிய மருத்துவமனையிலிருந்து, சிறிய கிளினிக் வரை பெரும்பாலான மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. காரணம் காய்ச்சல்.
ஆனால் இந்த காய்ச்சலை சாதாரணமாக எடுத்துகொள்ள முடியவில்லை. சாதாரண காய்ச்சல் ஒரு சில நாட்களிலில் மருத்துவர்களின் அறிவுரைப்படி மருந்துகள் எடுத்துகொண்டால் சரியாகிவிடும். ஆனால் திருச்சியில் சில நாட்களில் பரவும் இந்த மர்ம காய்ச்சல் ஐந்து நாட்கள், ஒரு வாரம் நீடிப்பது தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக இந்த காய்ச்சல் வருவதாக நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. மேலும் காவிரியில் தொடர்ந்து கரைபுரண்டோடும் வெள்ளத்தை பயன்படுத்தி காவிரியில் கலந்த கழிவு நீரினால் இது போன்ற நோய்தொற்று பாதிப்புகள் ஏற்படுகின்றனவா என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
எனவே திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களும், மாவட்ட சுகாதாரதுறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து இந்த திடீர் தீவிர காய்ச்சலுக்கான உரிய ஆய்வுகள் மூலம் காரணத்தை அறிவதுடன், மேற்படி காய்ச்சலால் அவதிப்படும் பொதுமக்களுக்கு வார்டுகள் தோறும் சிறப்பு மருத்துவக்குழுக்களை அமைத்து பொதுமக்களை காக்க மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம் என
கிஷோர் குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.