ஸ்ரீரங்கத்தில் போலீஸ் டார்ச்சர் செய்ததாக டிராவல்ஸ் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை.
திருச்சி மேலூர் ரோடு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில வசித்து வந்தவர் சரவண செல்வன் (வயது 41) இவர் அந்த பகுதியில் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார்.
இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் சரவண செல்வன் அலுவலகத்திற்கு அருகில் வசிக்கும் பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இந்நிலையில் சரவணன் செல்வன் அந்த பெண்ணுக்கு பல லட்சம் பணம் செலவு செய்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் திடீரென்று அந்த பெண்ணின் தொடர்பை சரவண செல்வன் நிறுத்திக் கொண்டார்.
இந்நிலையில் அந்தப் பெண் திருவரங்கம் போலீஸ் நிலையத்தில் சரவணா செல்வன் மீது புகார் கொடுத்ததாக தெரிகிறது இது குறித்து திருவரங்கம் போலீசார் சரவணனை அழைத்து புகார் மனு குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த சரவணா செல்வன் இரவு வீட்டின் அறையில் தூங்குவதாக மனைவியிடம் கூறிவிட்டுஅறைக்கு சென்றவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். விடியற்காலை நீண்ட நேரம் ஆகியும் கணவர் காலையில் அறையில் இருந்து வெளியே வராத காரணத்தால் சந்தேகம் அடைந்த மனைவி அறைக்கு சென்று பார்த்த பொழுது சரவண செல்வன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு மனைவி லாவண்யா அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து திருவரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து திருவரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உறவினர்கள் சரவண செல்வன் அறையில் இருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கு காரணம் அந்த பெண் மற்றும் திருவரங்கம் போலீஸ் நிலையத்தை சேர்ந்த முன்று போலீஸ்காரர்கள் என்றும், இந்த புகார் தொடர்பாக சிலர் தன்னை டார்ச்சர் செய்ததாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே தன்னுடைய சாவுக்கு மேற்கண்ட நபர்கள் தான் காரணம் எனவும் கூறியுள்ளார். இந்த கடிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரவண செல்வனின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கூறி சரவணசெல்வனின் உடலை வாங்க மறுத்து திருவரங்கம் போலீஸ் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டடு வருகின்றார்.
. இந்த சம்பவத்தால் திருவரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.