Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ரூ.130 மதுபானங்கள் விற்பனை ரத்து. மதுபானங்கள் மீண்டும் விலை உயருமா?தொழிலாளர்கள் விரக்தி.

0

'- Advertisement -

குடி குடியை கெடுக்கும் என தமிழகத்தில் ஓர் பழமொழி உண்டு.

ஆனால் இன்று தமிழகத்தில் 90% ஆண்கள் இன்று மதுவுக்கு அடிமையாகி உள்ளனர்.

தற்போதைய திமுக அரசு ஆட்சிக்கு வரும் முன்பு தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்து இருந்தனர்.

ஆனால் ஆட்சிக்கு வந்த பின்பு மதுபானங்கள் விலைகள் மட்டுமே உயர்த்தப்பட்டது.
கடைகள் குறைக்கப்படவில்லை.

பார்கள் இல்லாத போதும் 24 மணி நேரமும் கள்ள சந்தையில் மதுபானங்கள் தாராளாமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தற்போது தமிழகத்தில் குறிப்பாக திருச்சியில் எந்த ஒரு டாஸ்மாக் கடையிலும் 130 ரூபாய் சரக்குகள் விற்பனை கிடையாது.வெறும் 160 ரூபாய் அதற்கும் மேல் விலையில் உள்ள சரக்குகள் மட்டுமே கிடைக்கின்றது.

Suresh

அதுவும் கிடா மார்க்,ட்ரிபிள் சி என கேள்வி படாத சரக்குகள் மட்டுமே கடைகளில் விற்பனைக்கு உள்ளது.

ஆனால் இரவு 10 மணிக்கு மேல் கள்ள சந்தையில் 130 ரூபாய் சரக்குகள் தாராளமாக 220 ரூபாய்க்கு கிடைக்கின்றது.

130 ரூபாய் சரக்கு வாங்கி குடிப்பவர்கள் தினசரி ஏழை கூலி தொழிலாளர்கள் மட்டுமே.

ஏற்கனவே குவாட்டருக்கு ஐந்து ரூபாய் எஸ்ஆர்எம், டிஆர்எம் ஆகியோருக்கு தரவேண்டும் என கூறி எக்ஸ்ட்ராவாக பணம் பெரும் டாஸ்மாக் பணியாளர்கள் தற்போது ரூ.130 சரக்கு இல்லை என கூறுவதால் தின கூலி தொழிலாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் மோதல் ஏற்படும் நிலை உள்ளது.

130 ரூபாய்க்கு விற்கும் சரக்குகளை நிறுத்திவிட்டு அந்த சரக்குகளை 160 ரூபாய்க்கு விற்க தமிழக அரசு முயற்சி செய்கிறது என தின கூலிகள் கூறி வருகின்றனர்.

இதுவும் ஒரு வியாபார யுக்திதான்.

தமிழகத்தில் மதுபான விலை உயர்வுக்கு எந்தவித ஆர்ப்பாட்டமும் நடைபெறாது என்பதை அறிந்தே தமிழக அரசு இந்த முறையை பயன்படுத்துகிறது என தமிழக மதுபிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.